நிலையான வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தில், 5 பிஎஸ்பி புள்ளிகள் குறைத்துள்ளதாக பாரத் ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.
2020-ஆம் ஆண்டின் மத்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தை தொடர்ந்து, நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ அனைத்து முக்கிய கடன்களுக்கான வட்டி விகிதங்களை குறைப்பதாக அறிவித்துள்ளது. அதனுடன் நிலையான வைப்பு நிதிக்கும் வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த வட்டி விகிதமானது 5 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த நிதியாண்டில் எஸ்பிஐ ஒன்பதாவது முறையாக வட்டி குறைப்பு செய்துள்ளது. வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதங்களை குறைக்கும் என்றாலும், அதை ஈடுகட்ட வங்கி வடிக்கையாளர்களின் நிலையான வைப்பு நிதிக்கான வட்டியிலும் குறைப்பு செய்துள்ளது. ஆனால், 7 நாட்கள் முதல் 45 நாட்கள் வரையிலான வைப்புத் தொகைக்கு மட்டும் வட்டி குறைப்பு செய்யப்படவில்லை. தற்போது குறைக்கப்பட்டுள்ள இந்த புதிய வட்டி விகிதம், வரும் பிப்ரவரி 10 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.